மணமேல்குடி அருகே இறந்தவர் சடலத்தை குளத்தில் இறங்கி தூக்கி செல்லும் அவலம்



மணமேல்குடி அருகே மயானத்திற்கு செல்ல சாலை இல்லாததால் குளத்துக்கு நடுவே சடலத்தை தூக்கிச் செல்லும் அவலநிலை உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த இடையாத்திமங்கலம் கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் யாராவது இறந்தால் இடுகாட்டிற்கு சடலத்தை எடுத்துச் செல்ல சாலை வசதி கிடையாது.

அப்பகுதியில் உள்ள குளத்தின் வழியாகவே சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டி உள்ளது. குளத்தில் தண்ணீர் நிரம்பினால், அந்த தண்ணீரில் நீந்தியே சடலத்தை இடுகாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டிய அவலம் உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியது: 

எங்கள் கிராமத்தில் யாராவது இறந்தால் அவர்களை அடக்கம் செய்ய சரியான ரோடு வசதி இல்லாததால் குளத்தில் இறங்கி கொண்டு செல்கிறோம்.

சில நேரங்களில் குளம் முழுமையாக நிரம்பி விட்டால் நாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் நீருக்குள் தத்தளித்துக் கொண்டு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வோம்.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எங்களுக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் மயானத்திற்கு சாலை அமைத்து தராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments