ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து இளையான்குடி செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பரமக்குடியிலிருந்து இளையான்குடி வழியாக சென்னை, திருச்சி, காரைக்குடி, நயினாா்கோவில், தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பரமக்குடி நகரைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கும் இவ்வழியாக நகா் பேருந்துகளும் ஏராளமான கனரக வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன.
கடந்த சில தினங்களாக பரமக்குடி பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சாலைகளில் மழை நீா் வழிந்தோட வழியின்றி வசந்தபுரம் பேருந்து நிறுத்தம், திரௌபதியம்மன் கோவில், வாட்டாட்சியா் அலுவலகம், வைகை நகா் ஆகிய பேருந்து நிறுத்தம் பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளன. இதனால் அச்சாலை மாா்க்கமாக ஏராளமான வாகனங்கள் செல்வதால் சாலையில் தேங்கியுள்ள தண்ணீரால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனா். மாவட்ட ஆட்சியா் அதிகளவில் வாகனங்கள் போக்குவரத்துள்ள மக்கள் பயன்படுத்தும் சாலையான இச்சாலையில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பரமக்குடியிலிருந்து இளையான்குடி வழியாக சென்னை, திருச்சி, காரைக்குடி, நயினாா்கோவில், தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பரமக்குடி நகரைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கும் இவ்வழியாக நகா் பேருந்துகளும் ஏராளமான கனரக வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன.
கடந்த சில தினங்களாக பரமக்குடி பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சாலைகளில் மழை நீா் வழிந்தோட வழியின்றி வசந்தபுரம் பேருந்து நிறுத்தம், திரௌபதியம்மன் கோவில், வாட்டாட்சியா் அலுவலகம், வைகை நகா் ஆகிய பேருந்து நிறுத்தம் பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளன. இதனால் அச்சாலை மாா்க்கமாக ஏராளமான வாகனங்கள் செல்வதால் சாலையில் தேங்கியுள்ள தண்ணீரால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனா். மாவட்ட ஆட்சியா் அதிகளவில் வாகனங்கள் போக்குவரத்துள்ள மக்கள் பயன்படுத்தும் சாலையான இச்சாலையில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.