புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 55). இவரது மனைவி வெண்ணிலா. இவர்களது மகன் ஸ்டாலின் (35). இவர்கள் இன்று காலை காரில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர். காரை ஸ்டாலின் ஓட்டினார்.
அறந்தாங்கியில் இருந்து கட்டுமாவடி செல்லும் சாலையில் கோவில்வயல் அருகே திருமயத்தில் இருந்து சென்று கொண்டிருந்த காரும் அந்த வழியாக மணமேல்குடியில் இருந்து அறந்தாங்கி நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதின. இதில் நிலைதடுமாறிய கார் தாறுமாறாக ஓடி, சாலையோரமுள்ள மரத்தில் மோதியதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.
இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மணமேல்குடியை சேர்ந்த நடேசன் (35) அவர்களுக்கு ஒரு கையும், காலும் துண்டாகி பலத்த காயமடைந்தார். பாக்கியராஜ் பலத்த காயமடைந்து காருக்குள்ளேயே இறந்து கிடந்தார்.காரில் இருந்த ஸ்டாலின்,வெண்ணிலா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காருக்குள் சிக்கிய 3பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மற்ற 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நடேசனையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிரிழந்த பாக்கியராஜ் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இருப்பினும் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கியில் இருந்து கட்டுமாவடி செல்லும் சாலையில் கோவில்வயல் அருகே திருமயத்தில் இருந்து சென்று கொண்டிருந்த காரும் அந்த வழியாக மணமேல்குடியில் இருந்து அறந்தாங்கி நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதின. இதில் நிலைதடுமாறிய கார் தாறுமாறாக ஓடி, சாலையோரமுள்ள மரத்தில் மோதியதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.
இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மணமேல்குடியை சேர்ந்த நடேசன் (35) அவர்களுக்கு ஒரு கையும், காலும் துண்டாகி பலத்த காயமடைந்தார். பாக்கியராஜ் பலத்த காயமடைந்து காருக்குள்ளேயே இறந்து கிடந்தார்.காரில் இருந்த ஸ்டாலின்,வெண்ணிலா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காருக்குள் சிக்கிய 3பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மற்ற 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நடேசனையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிரிழந்த பாக்கியராஜ் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இருப்பினும் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.