புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கான செய்தியை மறுத்துள்ளதோடு, அதுகுறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பழிப்பு என்ற பெயரில் 2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 8ஆம் தேதி, உயர் மதிப்பு நோட்டுகளான ரூ.500, ரூ.1,000 ஆகியவை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. கருப்புப் பணம், கள்ள நோட்டுப் புழக்கத்தை ஒழிக்கவும், பணிமில்லா பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அரசு கூறியது.
அதன் பின்னர் புதிய வடிவிலான ரூ.500, ரூ.100, ரூ.50 நோட்டுகளும், புதிதாக ரூ.2,000 நோட்டுகளும் புழக்கத்துக்கு விடப்பட்டன.
புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தபிறகு, கருப்புப் பணமும் கள்ள நோட்டுப் புழக்கமும் மேலும் அதிகரித்துவிட்டதாகப் புகார் எழுந்தது.
சோதனைகளில் கைப்பற்றப்படும் பணத்தில் பெரும்பாலானவை ரூ.2,000 நோட்டுகளாக இருந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் மத்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாகத் தகவல் வெளியாகியது.
ஏடிஎம் எந்திரங்களிலிருந்து 2,000 ரூபாய் நோட்டுகளை நீக்குவதற்கான பணியில் வங்கிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இரண்டாவது முறையாகப் பணமதிப்பழிப்பா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ள சூழலில், இதுகுறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று மத்திய நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
கள்ள நோட்டு, கருப்புப் பணம் குறித்தும், ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவது குறித்தும் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அனுராக் தாகூர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இவ்வாறு தெரிவித்தார்.
பணமதிப்பழிப்பின் நோக்கம் நிறைவேறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
2016 நவம்பர் 4ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.17,74,187 கோடியாகும். அது 2019 டிசம்பர் 2ஆம் தேதி ரூ.22,35,648 கோடியாக அதிகரித்துள்ளது. 2014 அக்டோபர் முதல் 2016 அக்டோபர் வரையில் புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளின் மதிப்பு 14.51 சதவீத வளர்ச்சிகண்டது.
இதே வளர்ச்சி வீதத்தில் பார்த்தால் டிசம்பர் 2ஆம் தேதியில் நோட்டுகளின் மதிப்பு ரூ.25,40,253 கோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதைவிடக் குறைவான மதிப்பிலான நோட்டுகள்தான் புழக்கத்தில் உள்ளன என்றார் அனுராக் தாகூர்.
பணமதிப்பழிப்பு என்ற பெயரில் 2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 8ஆம் தேதி, உயர் மதிப்பு நோட்டுகளான ரூ.500, ரூ.1,000 ஆகியவை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. கருப்புப் பணம், கள்ள நோட்டுப் புழக்கத்தை ஒழிக்கவும், பணிமில்லா பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அரசு கூறியது.
அதன் பின்னர் புதிய வடிவிலான ரூ.500, ரூ.100, ரூ.50 நோட்டுகளும், புதிதாக ரூ.2,000 நோட்டுகளும் புழக்கத்துக்கு விடப்பட்டன.
புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தபிறகு, கருப்புப் பணமும் கள்ள நோட்டுப் புழக்கமும் மேலும் அதிகரித்துவிட்டதாகப் புகார் எழுந்தது.
சோதனைகளில் கைப்பற்றப்படும் பணத்தில் பெரும்பாலானவை ரூ.2,000 நோட்டுகளாக இருந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் மத்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாகத் தகவல் வெளியாகியது.
ஏடிஎம் எந்திரங்களிலிருந்து 2,000 ரூபாய் நோட்டுகளை நீக்குவதற்கான பணியில் வங்கிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இரண்டாவது முறையாகப் பணமதிப்பழிப்பா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ள சூழலில், இதுகுறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று மத்திய நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
கள்ள நோட்டு, கருப்புப் பணம் குறித்தும், ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவது குறித்தும் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அனுராக் தாகூர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இவ்வாறு தெரிவித்தார்.
பணமதிப்பழிப்பின் நோக்கம் நிறைவேறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
2016 நவம்பர் 4ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.17,74,187 கோடியாகும். அது 2019 டிசம்பர் 2ஆம் தேதி ரூ.22,35,648 கோடியாக அதிகரித்துள்ளது. 2014 அக்டோபர் முதல் 2016 அக்டோபர் வரையில் புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளின் மதிப்பு 14.51 சதவீத வளர்ச்சிகண்டது.
இதே வளர்ச்சி வீதத்தில் பார்த்தால் டிசம்பர் 2ஆம் தேதியில் நோட்டுகளின் மதிப்பு ரூ.25,40,253 கோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதைவிடக் குறைவான மதிப்பிலான நோட்டுகள்தான் புழக்கத்தில் உள்ளன என்றார் அனுராக் தாகூர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.