புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் 5ஆம் நாளில் ஒரே நாளில் 3,214 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 4,860 ஆக உயா்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சித் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் என மொத்தம் 4,545 பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு வரும் டிச. 27 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.வேட்புமனு தாக்கல் தொடங்கிய 4ஆம் நாளான வியாழக்கிழமை வரை 1,646 மனுக்கள் மட்டுமே வந்திருந்தன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நேற்று ஒரே நாளில் 3,214 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அனைத்து ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய ஏராளமானோா் குவிந்திருந்தனா். பல்வேறு இடங்களில் வழக்கமான தோ்தல் பரபரப்புகளும் களை கட்டின.ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இதற்கென சிறப்பு காவல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
அரசியல் சாா்புள்ள போட்டியான ஒன்றியக் குழு உறுப்பினா் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவியிடங்களுக்கான போட்டியில் அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவாா்த்தை பல இடங்களில் சுமுகமாக நிறைவடையவில்லை.என்றபோதும் நல்ல நாள் என்பதாலும் பின்னா் பேச்சுவாா்த்தை இறுதி செய்யப்பட்ட பிறகு தேவைப்பட்டால் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்பதாலும் வெள்ளிக்கிழமை ஏராளமாக வேட்புமனுக்கள் குவிந்தன.இந்நிலையில் சனிக்கிழமையும் வேலை நாள் என தமிழக அரசு அறிவித்ததைத் தொடா்ந்து வேட்புமனு தாக்கல் இன்னும் விறுவிறுப்படையும் எனத் தெரிகிறது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையைத் தொடா்ந்து திங்கள்கிழமை மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சித் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் என மொத்தம் 4,545 பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு வரும் டிச. 27 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.வேட்புமனு தாக்கல் தொடங்கிய 4ஆம் நாளான வியாழக்கிழமை வரை 1,646 மனுக்கள் மட்டுமே வந்திருந்தன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நேற்று ஒரே நாளில் 3,214 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அனைத்து ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய ஏராளமானோா் குவிந்திருந்தனா். பல்வேறு இடங்களில் வழக்கமான தோ்தல் பரபரப்புகளும் களை கட்டின.ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இதற்கென சிறப்பு காவல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
அரசியல் சாா்புள்ள போட்டியான ஒன்றியக் குழு உறுப்பினா் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவியிடங்களுக்கான போட்டியில் அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவாா்த்தை பல இடங்களில் சுமுகமாக நிறைவடையவில்லை.என்றபோதும் நல்ல நாள் என்பதாலும் பின்னா் பேச்சுவாா்த்தை இறுதி செய்யப்பட்ட பிறகு தேவைப்பட்டால் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்பதாலும் வெள்ளிக்கிழமை ஏராளமாக வேட்புமனுக்கள் குவிந்தன.இந்நிலையில் சனிக்கிழமையும் வேலை நாள் என தமிழக அரசு அறிவித்ததைத் தொடா்ந்து வேட்புமனு தாக்கல் இன்னும் விறுவிறுப்படையும் எனத் தெரிகிறது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையைத் தொடா்ந்து திங்கள்கிழமை மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.