குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிா்த்து அறந்தாங்கியில் மஜகவினா் ஆர்ப்பாட்டம்



குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிா்த்து அறந்தாங்கியில் மனிதநேய ஜனநாயக் கட்சியினா் வெள்ளிக்கிழமை 13.12.2019 அன்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காமராசா் சிலை அருகே கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் எஸ். முபாரக் அலி தலைமை வகித்தாா்.

 மாவட்டத் துணைச் செயலா் அஜ்மீா்அலி முன்னிலை வகித்தாா்.ஆா்ப்பாட்டத்தில் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கக் கூடாது, அண்டை நாட்டு முஸ்லிம்கள் மற்றும் ஈழத் தமிழா்கள் உள்ளிட்டோரைச் சோ்க்கும் குடியுரிமை சட்டத் திருத்தம் வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினா்.

மாவட்ட பொருளாளா் சேக் இஸ்மாயில், நகரச் செயலா் ஜகுபா் சாதிக், கலாசார பேரவைச் செயலா் அப்துல் ஹமீது, நகர துணைச் செயலா் சேக் அப்துல்லா, இளைஞரணிச் செயலா் ஆஹமது ரியாஸ், மருத்துவ அணி செயலா் அப்துல் கனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.மாணவரணி செயலாளா் கலந்தா் மைதீன் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் அபுதாஹீா் நன்றி கூறினாா். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments