ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வாக்குச்சாவடிக்குள் நுழைந்து அதிகாரியை மிரட்டிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட கொடிப்பங்கு கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்து வரும் ராமகிருஷ்ணன் மைக்ரோ அப்சர்வாக நியமிக்கப்பட்டிருந்தார்.
தேர்தல் பணியின் போது அதே கிராமத்தைச்சேர்ந்த ரவிச்சந்திரன்(49), சங்கர் (45), கருணாகரன் (23), கருப்பையா (23), தங்க வேல் (40), சுரேஷ் (23) உள்பட 8 பேர் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து தேர்தல் அதிகாரியான ராமகிருஷ்ணனை அவதூறாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்தனர்.
மேலும் இவர்களது நடவடிக்கை வாக்களிக்க வந்த பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருப்பதாக தொண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தினார். 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.