கத்தர் மண்டல தமுமுக மமகவின் கிளையான இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவையின் சார்பில் ஃபனார் உள்ளரங்கில் மாபெரும் இஸ்லாமிய சமுதாய ஒற்றுமை பொதுக்கூட்டம் 20.12.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
பேரவையின் துணை தலைவர் மெளலவி.ஷரஃபுத்தீன் உமரி அவர்கள் வரவேற்புரை மற்றும் தொகுப்புரையுடன் கூட்டம் துவங்கியது.
ஆரம்பமாக பேரவையின் மார்க்கச்செயலாளர் மெளலவி. இம்ரான் உமரி அவர்கள் கிராத் ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார்கள்.
பேரவையின் தலைவர் மெளலவி. நூருல்லாஹ் பாஷா உமரி அவர்களின் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் ஆலோசனை குழு தலைவர் சகோ. நாசர் அவர்களும் பேரவையின் ஆதரவாளர் சகோ. ரஹ்மத்துல்லா அவர்களும் முன்னிலை வகித்தார்கள்.
முதலாவதாக பேரவையின் 2020 ஆம் ஆண்டிற்கான காலண்டரை மாநில தலைவர் பேரா. ஜவாஹிருல்லா அவர்கள் வெளியிட்டார்கள்.
அடுத்ததாக தமுமுக மனித வள மேம்பாடு விழி அமைப்பின் மாநில செயலாளர் டாக்டர். ஹூஸைன் பாஷா அவர்கள் "வெற்றி தரும் தேடல்" எனும் தலைப்பின் கீழ் சிறப்புரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து தமுமுக மற்றும் மமகவின் மாநில தலைவர் பேரா.ஜவாஹிருல்லா அவர்கள் "உத்வேகம் தரும் எச்சரிக்கை" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
தலைவரின் உரையில் இன்றைய கால சூழலில் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் பல்வேறு விசயங்களை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் மற்றும் அன்றைய சூழலில் நபிமார்கள் மற்றும் நபித்தோழர்கள் பட்ட கஷ்டங்களை மேற்கோள்காட்டி பேசியது உத்வேகமாக அமைந்தது.
இறுதியாக கத்தர் மண்டல தமுமுக மமகவின் பொதுச்செயலாளர் சகோ. மைதீன்ஷா அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை பொருளாளர் சகோ. இஸ்மாயில் அவர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தார்.
மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சகோதரர்கள், அபுபக்கர் சித்திக், பாரூக், அப்பாஸ், கத்தார் மண்டல தமுமுக சகோதரர்கள்,மற்றும் கத்தார் வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் : கோபாலப்பட்டிணம் அபுபக்கர் சித்திக்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.