புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்க திருத்தம் 2020-க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமாமகேஸ்வரி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.
பின்னர் கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்க திருத்தம் 2020-க்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 லட்சத்து 34 ஆயிரத்து 824 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 43 ஆயிரத்து 726 பெண் வாக்காளர்களும், 48 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 12 லட்சத்து 78 ஆயிரத்து 598 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர்.
இதில் கந்தர்வக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதியில் 96 ஆயிரத்து 858 ஆண் வாக்காளர்களும், 94 ஆயிரத்து 713 பெண் வாக்காளர்களும், 13 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 584 வாக்காளர்கள் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 168 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 6 ஆயிரத்து 818 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 995 வாக்காளர்களும், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 476 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்களும், 14 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 987 வாக்காளர்கள் உள்ளனர்.
திருமயம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 344 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 9 ஆயிரத்து 684 பெண் வாக்காளர்களும், 8 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 36 வாக்காளர்களும், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து ஆயிரத்து 500 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 2 ஆயிரத்து 945 பெண் வாக்காளர்களும், 2 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 447 வாக்காளர்களும்,
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 478 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 12 ஆயிரத்து 69 பெண் வாக்காளர்களும், 2 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 549 வாக்காளர்கள் உள்ளனர்.
சிறப்பு முறை சுருக்க திருத்தம் 2020-ன் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்கள் பெற நேற்று முதல் வருகிற ஜனவரி மாதம் 22ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. வாக்காளர்களின் வசதிக்கேற்ப 4ம்தேதி (சனிக்கிழமை), 5ம் தேதி (ஞாயிறுகிழமை), 11ம் தேதி (சனிக்கிழமை), 12ம் தேதி (ஞாயிறுகிழமை) ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம் 909 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைந்து உள்ள இடங்களில் நடைபெறும்.
மேலும் 2020ம் ஆண்டிகான இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற பிப்ரவரி மாதம் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் தண்டாயுதபாணி, டெய்சிக்குமார், குணசேகர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மறும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.