தனது உயிரே போனாலும் புதுவையில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த விடமாட்டேன் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுவையில் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
புதுவை சுதேசி காட்டன் மில் அருகில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் முஹம்மது மூசா தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அன்வர் பாதுஷா முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:-
எனது உயிரே போனாலும் புதுவையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்த விடமாட்டேன். எங்கள் பிணத்தின் மீது ஏறி நின்றாலும் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம். என்றும் சிறுபான்மை மக்களுக்கு புதுவை காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு முதன்மை துணைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான அப்துல் ரஹ்மான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஆபிரூத்தீன்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக புதுவை மாவட்ட தலைவர் பஷீர் அஹமது, கட்சியின் மாநில பேச்சாளர் அஹமது மீரான், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் அப்துல் ஹமீது, மஸ்ஜிதே முஹம்மதியா உருளையன்பேட்டை துணைச்செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமிய மக்கள் பங்கேற்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.