மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் போல் லுங்கி குல்லா அணிந்துக் கொண்டு வன்முறைக்கு சதி திட்டம் தீட்டிய 5 பேரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் போது காவல்துறையால் பல இடங்களில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
மாணவர்கள் வன்முறைக்கு இஸ்லாமிய மற்றும் இடதுசாரி அமைப்புகளே காரணம் என பா.ஜ.க மற்றும் இத்துத்வா கும்பல் பொய் பிரசாரத்தை பரப்பி வந்தனர்.
சமீபத்தில் கூட ஜாமிய பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற போராட்டத்தில் சிலர் ஜீன்ஸ் டி-ஷர்ட் போட்டுக் கொண்டு மாணவர்களை தாக்கும் காட்சி வெளியானது. ஆனால் காவல் துறை அது குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமியர்கள் போல் லுங்கி மற்றும் குல்லாவை அணிந்து கொண்டு வன்முறைக்கு சதி திட்டம் தீட்டிய 5 பேரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதில் ஒருவர் மேற்கு வங்க பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.