புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 551 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27-ந் தேதி முதல் கட்டமாகவும், 30-ந் தேதி 2-வது கட்டமாகவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி உள்ளிட்டவற்றிற்கு மட்டுமே உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
முதல் கட்டமாக
அன்னவாசல், விராலிமலை, கறம்பக்குடி, குன்னண்டார்கோவில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும்,
2-ம் கட்டமாக
அரிமளம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, திருமயம், மணமேல்குடி, திருவரங்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
4 ஆயிரத்து 551 பதவிகளுக்கு
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 22 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், 225 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 497 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், 3 ஆயிரத்து 807 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 4 ஆயிரத்து 551 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 976 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 29 ஆயிரத்து 828 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 31 என மொத்தம் 10 லட்சத்து 57 ஆயிரத்து 835 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
வாக்காளர்கள் வாக்களிக்க மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் 2 ஆயிரத்து 301 வாக்குச்சாவடி மையங்களை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.