டெல்லி ஜும்மா மஸ்ஜித் அருகே பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் போராட்டம்




குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி ஜும்மா மஸ்ஜித் அருகே பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்று  போராட்டத்தில் குதித்தனர்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் 15 மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.


இந்நிலையில், டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜும்மா மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்காக ஏராளமான முஸ்லிம்கள் திரண்டனர். தொழுகைக்கு பின்னர் அவர்கள் வீடுகளுக்கு செல்லாமல் மசூதி அருகே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களில் சிலர் மகாத்மா காந்தி மற்றும் பாபாசாகேப் அம்பேதகரின் படங்களை ஏந்தியவாறு மத்திய அரசு மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக, இன்று ஜும்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணி செல்ல போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்த பீம்சேனா அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டிருப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.ஆளில்லா விமானங்கள் மூலம் அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments