வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வேட்பாளர் தோல்வி..! விரக்தியில் வீதி வீதியாக ஒட்டிய போஸ்டர்



வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வேட்பாளர் தோல்வி..! விரக்தியில் வீதி வீதியாக ஒட்டிய போஸ்டர்
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வேட்பாளர் தோல்வி..! விரக்தியில் வீதி வீதியாக ஒட்டிய போஸ்டர்
   தமிழகத்தில் 2 கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். 27 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி 2 நாட்களாக நடைபெற்றது.

    
    மேற்கு மாவட்டங்களில் அதிமுகவும், தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் திமுகவும் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அற்கான சான்றிதழ் பெற்றுள்ளனர்.
     உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டுவது ஒருபுறமிருக்க தோல்வியடைந்தவர்களும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில்  “காசு வாங்குன ஓட்டுப்போட்டாயா“ என்று பெயர் குறிப்பிடாத வேட்டபாளர் ஒருவர்  பணம் வாங்கிய வாக்காளர்களை திட்டி போஸ்டர் ஒட்டியுள்ளார்.
      தேர்தல் விதிமுறைப்படி ஒட்டுக்கு பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் குற்றமாகும். ஆனால் வாக்காளர்கள் கொடுத்த பணத்திற்கு ஓட்டுப் போடவில்லை என்று வேட்பாளர் ஒருவர் திட்டி போஸ்டர் ஒட்டி உள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கோட்டூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments