
கைத்தறி நெசவு தொழிலை காப்பாற்றும் விதமாகவும், இளைஞர்களிடம் வேட்டி அணியும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஜனவரி 6ம் தேதி உலக வேட்டி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
வேட்டி தினம் கொண்டாட்டம் குறித்த சரியான வரலாற்று தகவல்கள் கிடைக்காத நிலையில், 2015 ஆம் ஆண்டு கோ ஆப் டெக்ஸ் நிறுவன செயல் இயக்குனராக இருந்த ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் பொங்கலை ஒட்டி ஜனவரி 6 ஆம் தேதி உலக வேட்டி தினம் கொண்டாட முன்மொழிந்தார். அன்று முதல் ஜனவரி 6 ஆம் தேதி உலக வேட்டி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேட்டி தினத்தை வித்தியாசமாக கொண்டாட புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்னையில் ஒரு பிரியாணி கடை. காதலர் தினத்தன்று முரட்டு சிங்கிளுக்கு பிரியாணி இலவசம், தண்ணீர் பஞ்சத்தின் போது பிரியாணிக்கு தண்ணீர் இலவசம் போன்ற வித்தியாசமான அறிவிப்புகளை வெளியிடும் தொப்பி வாப்பா பிரியாணி கடை தற்போதும் ஒரு வித்தியாச அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, ஜனவரி 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெள்ளை வேட்டி அணிந்து வரும் முதல் 50 நபர்களுக்கு ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்று அறிவித்துள்ளது. மேலும், கைத்தறி நெசவாளர்களுக்கு உதவும் விதமாக, ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் ஒரு கைத்தறி வேட்டி, துண்டு இலவசம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.