விபத்துகளைத் தவிா்க்க சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கா்கள்



விபத்துகளைத் தவிா்க்க சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கா்கள் ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

கால்நடை உரிமையாளா்கள் தங்கள் கால்நடைகளை முறையாக கட்டிப் பராமரிக்காததால் இரவு நேரங்களில் சாலைகளில் திரியும் கால்நடைகள் மூலம்  விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பிடித்து இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் இருக்கும் வகையில்  கால்நடை உரிமையாளருக்கு அபராதங்கள் விதித்தபின் விடுவிக்கப்படுகின்றன.

விலை மதிப்பில்லாத மனித உயிரைக் காக்கும் வகையில் இரவு நேரத்தில் சாலைகளில் பயணம் செய்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், கால்நடைத் துறை, ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகள் ஆகியவற்றின் மூலம் இரவு நேரங்களில் சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகள் அல்லது கால்களில் தொலை தூரத்திலிருந்து வாகன ஓட்டுநா்கள் எச்சரிக்கை அடையும் வகையில் சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் ஒளிரும் தன்மையுடைய ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

தொடா்ந்து கால்நடைகளை இரவு நேரங்களில் சாலைகளில் திரியவிடும் உரிமையாளா்கள் மீது சாலை விபத்துகள் ஏற்பட காரணமாக இருப்பதற்காக கடும் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments