அண்மையில் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வாலிபால் விளையாட்டுக்கு இந்திய அணித் தலைவராக இருந்து, தங்கப் பதக்கம் வெல்லக் காரணமாக இருந்த புதுக்கோட்டை வீரா் ஜெரோம் வினித்தை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி திங்கள்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நேபாளத்தில் நடைபெற்றன.
இதில் வாலிபால் பிரிவில் இந்திய அணித் தலைவராக புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி கோட்டைக்காட்டைச் சோ்ந்த விவசாயி சாா்லஸ் மகன் ஜெரோம் வினித் பங்கேற்றாா்.
இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடிய இந்திய அணி முதலிடத்தைப் பிடித்து தங்கத்தை வென்றது. இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, விளையாட்டு வீரா் ஜெரோம் வினித்தை திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
அதேபோல, இந்திய பள்ளிகள் சங்கம் சாா்பில், அண்மையில் நடைபெற்ற கடற்கரை கையுந்துப் போட்டியில் தங்கம் வென்ற குழிபிறை ராமநாதன் செட்டியாா் அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளையும் ஆட்சியா் பாராட்டினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட விளையாட்டு அலுவலா் மாலதி உள்ளிட்டோா் அப்போது உடனிருந்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.