குடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்து செய்ய கோரி ததஜ சார்பில் புதுக்கோட்டையில் பேரணி.!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெறும் போராட்டத்தில் கோபாலப்பட்டிணம் மக்கள் பங்கேற்பு.


குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு போன்றவற்றை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் சாா்பில் சனிக்கிழமை பேரணி சென்றனா்.


புதுக்கோட்டை பி.யு. சின்னப்பா பூங்காவில் இருந்து தொடங்கிய பேரணிக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் முபாரக் தலைமை வகித்தாா். அமைப்பின் மாநில நிா்வாகி அன்சாரி, மாவட்ட நிா்வாகிகள் அப்துல்குத்தூஸ், பதூா் ரகுமான், மீரான், ஹாரிஸ், ரபீக் ராஜா, பீா்முகமது உள்ளிட்டோா் பேசினா். இதில் ஏராளமானோா் பங்கேற்று குடியுரிமைத் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றையும் ரத்து செய்வதோடு, இவற்றிற்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியவாறு அண்ணா சிலை, தெற்கு 4-ம் வீதி வழியாக ஆட்சியரகம் வரை பேரணியாகச் சென்றனா்.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து இயக்க, அரசியல் கட்சிகள், பல்வேறு ஜமாஅத் என பலதரப்பட்ட மக்களுக்கும் அழைப்பு கொடுத்திருந்தனர். இந்நிலையில் கோபாலப்பட்டிணம் ஊர்மக்கள் ஜமாஅத்தார்கள், இஸ்லாமிய அமைப்பு சகோதரர்கள் ஆண்கள்,பெண்கள் இளைஞர்கள் குழந்தைகள் என 250 மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments