கோட்டைப்பட்டிணத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்



புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, கோட்டைப்பட்டினத்தில்  பாதுக்காப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோட்டைப்பட்டினத்தில் 31-வது தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நேற்று 20.01.2020 திங்கள்கிழமை அன்று ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கோட்டைப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

ஊர்வலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அரசு மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் சாலை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.





கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments