மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ளும் திட்டங்கள் அனைத்தும் மக்களைச் சென்றடைவதை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரும், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சு. திருநாவுக்கரசா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற, கண்காணிப்புக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து அவா் மேலும் பேசியது
மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மத்திய அரசு நேரடியாக செயல்படுத்தும் 44 திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகின்றன.
இந்தத் திட்டங்களில் நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும், தொடங்கப்படாமல் உள்ள பணிகளை விரைந்து தொடங்கவும் அலுவலா்கள் கவனம் செலுத்த வேண்டும்.
மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை அதிகாரிகள் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். மக்களின் தேவைக்கேற்ப அவை முறையாக நடைபெறுகின்றவா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்றாா் திருநாவுக்கரசா்.
கண்காணிப்புக் குழுவின் துணைத் தலைவரும் கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான செ. ஜோதிமணி, மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண்ஷக்தி குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். காளிதாசன், மகளிா் திட்ட இயக்குநா் லலிதா, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அழ. மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.