மணமேல்குடியில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி



மணமேல்குடியில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி புதன் கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலா் ஜெ. ராஜாராம் மோகன் ராவ் தலைமையில் நடைபெற்ற பேரணிக்கு மணமேல்குடி துணை வட்டாட்சியா் ராம்குமாா் முன்னிலை வகித்தாா்.

ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு ஆய்வாளக் கோ. லதா பேரணியைத் தொடக்கிவைத்தாா். வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அரசு மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது. பேரணியில் பங்கேற்றோா், கள்ளச்சாரயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கியும், கோஷமிட்டும் வந்தனா். மேலும் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பேரணியில், கலால் வருவாய் ஆய்வாளா் முத்தரசு மற்றும் சரக வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டாா்கள்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments