எங்களுக்கே வேலை இல்லை, இவர்கள் எதற்கு?! -தஞ்சையில் பூட்டு போடப்பட்ட வடமாநிலத்தவர் கடைகள்



தஞ்சையில் கடைகளுக்கு சீல்
      தஞ்சாவூரில் இருக்கும் வெளிமாநிலத்தவர்கள் உடனே வெளியேற வேண்டும் என ஓர் அமைப்பினர் திடீரென பூட்டு கொண்டு பூட்டியதுடன், நோட்டீஸ் ஒன்றையும் ஒட்டி விட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


    தஞ்சாவூரில் தமிழ்த் தேசியக் கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் நள்ளிரவில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள வெளி மாநிலத்தவர்கள் கடைகளுக்குப் பூட்டு போட்டு பூட்டியுள்ளனர். அத்துடன் கதவில் நோட்டீஸ் ஒன்றையும் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
அதில் `தமிழக அரசே, வந்து குவியும் வட மாநிலத்தவர்களை வெளியேற்று. தமிழகத்தில் அதிக அளவில் வெளிமாநிலத்தவர்கள் உள்ளதால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் இங்கு அதிக அளவிலான கடைகள் நடத்தி வருவதால் தமிழர்கள் உரிமைகளும் வாழ்வாதாரங்களும் பறிக்கப்படுகின்றன.


தஞ்சையில் கடைகளுக்கு சீல்



தரகர்கள் சிலர் வடமாநிலத்தவர்களை இங்கு வேலைக்காக இறக்குமதி செய்கின்றனர். அவர்களுக்கும் எச்சரிக்கை செய்கிறோம். நாங்களாகச் சொல்லும்போதே கிளம்பிப் போ இல்லை என்றால் நாங்கள் அடித்து விரட்டுவோம்' என்ற வாசகங்கள் அந்த நோட்டீஸில் அச்சடிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை வழக்கம் போல் கடைகளைத் திறக்க வந்த வட மாநிலத்தவர்கள் பூட்டு போடப்பட்டிருப்பதையும் நோட்டீஸ் ஒட்டியிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments