ல்உனக்கு ஏன் இவ்வளவு இஸ்லாமிய நண்பர்கள்?’ - சமூக ஆர்வலருக்கு உ.பி காவல் நிலையத்தில் நேர்ந்த துயரம்!
உனக்கு நடப்பதைப் போலவே உன்னுடைய மனைவிக்கும் குழந்தைக்கும் நடக்கும்’ என்று காவல்துறையினர் மிரட்டியதாகவும் சமூக ஆர்வலர் ராபின் வர்மா தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதில், லக்னோவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் ஆசிரியருமான ராபின் வர்மாவும் அடங்குவார். சி.ஏ.ஏ-க்கு எதிராக லக்னோவில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட இவரை கடந்த டிசம்பர் 20-ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.
லக்னோவில், ஹஸ்ரத்கஞ்ச் எனும் பகுதியிலுள்ள உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருக்கும்போது பத்திரிகையாளர் ஒருவருடன் ராபின் வர்மா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முதலில் ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்துக்கும் பின்னர் சுல்தான்கஞ்ச் காவல் நிலையத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டு பெல்ட்டால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.