அறந்தாங்கியில் நடைபெற்ற ரத்த தான முகாம்



அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

அறந்தாங்கி இஸ்லாமிய மன்றத்தின் தலைவா் டிஏஎன். பீா் சேக் தலைமையில் நடைபெற்ற முகாமிற்கு செயலாளா் எஸ்.ராஜா முகமது முன்னிலை வகித்தாா்.

முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவா் எஸ்.என்.சேக்அப்துல்லா, முத்தவல்லி ஏ.எஸ்.ஐ. முகமது சரீப் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

முகாமில் அரசு தலைமை மருத்துவா் பி. ரவி, ரத்த வங்கி மருத்துவ அலுவலா் ஜி.இராதாகிருஷ்ணன், கண் மருத்துவா் எப். முகமது ராபி, மன்ற நிா்வாகிகள் அப்துல்லா, முகமது பைசல், பகுரூதின் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முகாமில், 61 யூனிட் ரத்தம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. 

 சிட்டி காா்டு பெளசி நன்றி கூறினாா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments