கோட்டைபட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்



கோட்டைப்பட்டினம் ECR பள்ளி வளாகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முன்னெடுப்பில் குடியுரிமையை பறிக்க நினைக்கும் கருப்பு சட்டத்திற்க்கு எதிராக மாபெரும் கண்டன பொதுகூட்டம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை கிழக்கு  மாவட்ட செயலாளர் F.முகம்மது சாலிகு தலைமையேற்று நடத்தினார். U.செய்யது அஹமது வரவேற்புரை ஆற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் ஆனா.அக்பர் அலி, ஒன்றிய குழு உறுப்பினர் கலந்தர் நெய்னா முஹம்மது மற்றும் சேர்கான் ஜெகதாப் பட்டினம் ஊராட்சி தலைவர் அரபு மரைக்காயர் மாவட்ட ஜமாத்துல் உலமா செயலாளர் SA.ஜாபர்அலி உலவி  எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தோழமை இயக்க நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர்.




மெளலவி.நெய்னா முகம்மது, மாநில பேச்சாளர், இமாம் ஹஸ்ஸான் பைஜி, மாநில பொதுச் செயலாளர் B.அப்துல் ஹமீது, இராமநாதபுரம் மாவட்ட பொதுச் செயலாளர், சகோதரர். செய்யது இப்ராஹிம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அப்துல் காசிம் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

இதில் ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள்  என திரளாக கலந்து கொண்டனர்

தகவல் :
SDPI கட்சி
கோட்டைபட்டினம் கிளை
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments