மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத , குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறக் கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக நாளை 19.02.2019 புதன்கிழமை புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் பேரணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டியும் மற்றும் கோபாலப்பட்டிணத்தில் தொடர் இருப்பு போராட்டம் நடத்துவது பற்றியும் ஆலோசிக்க ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
எனவே நமது ஊரில் உள்ள பெரியோர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் இன்று 18.02.2020 (செவ்வாய்கிழமை) காலை 9.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு தங்களுடைய ஆலோசனைகளை வழங்குமாறு போராட்ட குழு மற்றும் ஊர் ஜமாத் நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
கோபாலப்பட்டிணத்தில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டம், இடம், நேரம், தேதி விவரங்கள் :
இடம்: கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல்
நாள்: 18-02-2020 செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 9.00 மணியளவில்
இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கோபாலப்பட்டிணம் மீடியா (GPM மீடியா) சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: முகமது யாசின்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.