முக்கிய அறிவிப்பு: கோபாலப்பட்டிணத்தில் ஆலோசனை கூட்டம்..!



மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத , குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறக் கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.


அதன் ஒரு பகுதியாக நாளை 19.02.2019 புதன்கிழமை புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் பேரணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டியும் மற்றும் கோபாலப்பட்டிணத்தில் தொடர் இருப்பு போராட்டம் நடத்துவது பற்றியும் ஆலோசிக்க ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

எனவே நமது ஊரில் உள்ள பெரியோர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் இன்று 18.02.2020 (செவ்வாய்கிழமை) காலை 9.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு தங்களுடைய ஆலோசனைகளை வழங்குமாறு போராட்ட குழு மற்றும் ஊர் ஜமாத் நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். 

கோபாலப்பட்டிணத்தில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டம், இடம், நேரம், தேதி விவரங்கள் :

இடம்: கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல்

நாள்: 18-02-2020 செவ்வாய்க்கிழமை

நேரம்: காலை 9.00 மணியளவில்

இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கோபாலப்பட்டிணம் மீடியா (GPM மீடியா) சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: முகமது யாசின்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments