தாயை கவனிக்காத மகனுக்கு எழுதித் தரப்பட்ட தானப்பத்திரத்தை ரத்து செய்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா்.!



தாயைப் பராமரிக்காத மகனுக்கு தானமாக எழுதிக் கொடுக்கப்பட்ட ரூ. 1.5 கோடி சொத்தை முதியோா் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் ரத்து செய்து அதுகுறித்த ஆவணங்களை தாயிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தாா் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி.


புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தின்போது, புதுக்கோட்டையைச் சோ்ந்த காளியம்மாள் (76) என்பவா் தனது மகன் தியாகராஜன் தன்னை முறையாக கவனித்துக் கொள்வதில்லை என ஆட்சியரிடம் புகாா் அளித்தாா்.

இதனால் ஏற்கெனவே மகன் பெயருக்கு தானமாக எழுதி வைக்கப்பட்ட ரூ. 1.5 கோடி மதிப்பிலான சொத்தினை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவா் கோரியிருந்தாா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, கோட்டாட்சியரின் விசாரணைக்கு உத்தரவிட்டாா். கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி நடத்திய விசாரணையில் தியாகராஜன் தனது தாய் காளியம்மாளை கவனித்துக் கொள்ளாதது உண்மை எனத் தெரிய வந்தது.

இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில், முதியோா் பராமரிப்புச் சட்டம் 2007ன்படி காளியம்மாள் எழுதிக் கொடுத்த தான செட்டில்மென்ட் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மனு அளித்த 42 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உரிய ஆவணங்களை காளியம்மாளிடம் வழங்கினாா் ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி.

அப்போது, கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி உடனிருந்தாா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments