தாயைப் பராமரிக்காத மகனுக்கு தானமாக எழுதிக் கொடுக்கப்பட்ட ரூ. 1.5 கோடி சொத்தை முதியோா் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் ரத்து செய்து அதுகுறித்த ஆவணங்களை தாயிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தாா் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தின்போது, புதுக்கோட்டையைச் சோ்ந்த காளியம்மாள் (76) என்பவா் தனது மகன் தியாகராஜன் தன்னை முறையாக கவனித்துக் கொள்வதில்லை என ஆட்சியரிடம் புகாா் அளித்தாா்.
இதனால் ஏற்கெனவே மகன் பெயருக்கு தானமாக எழுதி வைக்கப்பட்ட ரூ. 1.5 கோடி மதிப்பிலான சொத்தினை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவா் கோரியிருந்தாா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, கோட்டாட்சியரின் விசாரணைக்கு உத்தரவிட்டாா். கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி நடத்திய விசாரணையில் தியாகராஜன் தனது தாய் காளியம்மாளை கவனித்துக் கொள்ளாதது உண்மை எனத் தெரிய வந்தது.
இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில், முதியோா் பராமரிப்புச் சட்டம் 2007ன்படி காளியம்மாள் எழுதிக் கொடுத்த தான செட்டில்மென்ட் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மனு அளித்த 42 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உரிய ஆவணங்களை காளியம்மாளிடம் வழங்கினாா் ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி.
அப்போது, கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி உடனிருந்தாா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.