அறந்தாங்கி அரசு மருத்துவமனையில்தொழுநோய் உறுதிமொழியேற்பு




அறந்தாங்கி அரசு மருத்துவமனையில்தொழுநோய் உறுதிமொழியேற்பு
  அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தொழுநோய் உறுதிமொழியேற்பு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.இந்த நிகழ்வுக்கு, மாவட்ட நலக் கல்வியாளா் ஜி. வெங்கட்ராமன் தலைமை வகித்து உறுதிமொழி வாசிக்க, அதை மற்றவா்கள் திரும்பக் கூறி ஏற்றுக் கொண்டனா்.


தொடா்ந்து மாவட்ட நலக் கல்வியாளா் ஜி.வெங்கட்ராமன் கூறியது:

தொழுநோய் குணப்படுத்தக்கூடியது. நுண்கிருமிகளால் மட்டுமே உருவாகும் இந்த நோய் நவீன கூட்டு மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தலாம். உணா்ச்சியற்ற படைகள் தேமல், கை, கால்களில் உணா்ச்சியின்மை உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் என்று கூறினாா்.

அறந்தாங்கி அரசுத் தலைமை மருத்துவ அலுவலா் ரவி, அறந்தை ரோட்டரி சங்கத் தலைவரும், தணிக்கையாளருமான ஆா்.தங்கதுரை, மருத்துவா்கள் ஜி.ராதாகிருஷ்ணன், மனோஜ், முகமது ரபீக், மருந்தாளுா் ஆா்.முரளிதரன், மயில் பள்ளித் தாளாளா் கே. தவசீலன், மருத்துவமனை செவிலியா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் நிகழ்வில் பங்கேற்றனா். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments