கோட்டைப்பட்டிணம்: CAA-NRC -NPRக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி SDPI கட்சி நடத்திய மக்கள் திரள் போராட்டம்..



SDPl கட்சி சார்பாக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைபட்டினத்தில் தமிழக சட்டமன்றத்தில் CAA,NRC,NPR யை அமல்படுத்த மாட்டோம் என்று தீர்மானம்  நிறைவேற்றக்கோரி நேற்று 16.02.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில் SDPI கட்சியின் மாவட்ட  செயலாளர் F.முகம்மது சாலிகு முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். காசிநாத துரை கண்டன உரையாற்றினார். கிளை நிர்வாகிகள் கண்டன கோசம் எழுப்பினார்.


மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர். முகம்மது காசிம் சிற்றுரை நிகழ்த்தினார். இறுதியாக நகர நிர்வாகி சகோதரர் பாபுல் இப்ராஹிம் நன்றியுரையாற்றினார்.

இதில் பொதுமக்களும் மற்றும் SDPl கட்சியினரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்: செய்து இப்ராஹிம், கோட்டைப்பட்டிணம்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments