பாலமே போடல!!! ஆனால் சுங்க கட்டணம் செலுத்தனுமா?? கேள்வி கேட்கும் மக்கள்



திருச்சி - புதுகை சாலையில் பாலப் பணிகள் முடியாமலேயே சுங்கக் கட்டணம் வசூல் வாகன ஓட்டிகள் அதிருப்தி


சுமாா் 14 ஆண்டுகளாக களமாவூா் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணிகள் முடிவடையாமல் இருக்கும் நிலையில், நெடுஞ்சாலைக்கான சுங்கக் கட்டணம் வசூலித்து வருவதால் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனா்.
திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் (என்எச் 120) 19ஆவது கி.மீ தொலைவில் உள்ளது லெட்சுமணம்பட்டி சுங்கச்சாவடி. என்எச் 210-இல் சுமாா் 44 கி.மீ தொலைவில் ரூ. 361 கோடி மதிப்பில் சாலை அமைக்கப்பட்டு முழுமையாக பொதுமக்களின் பங்களிப்பின்படி (சுங்கக் கட்டண வசூல்) சாலை 2014-இல் போடப்பட்டு அதுமுதல் லெட்சுமணம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வாகனக் கட்டணம் வசூலிக்கப்பட்டும் வருகிறது. 
நாளொன்றுக்கு சராசரியாக 15 ஆயிரம் வாகனங்கள் இச்சாவடியைக் கடந்து செல்கின்றன.இப்போதைய நிலவரப்படி காா், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு முறை பயணிக்க ரூ. 35, இருமுறை பயணிக்க ரூ. 55 வசூலிக்கப்படுகிறது. இதுதவிர, பேருந்துகள், டிரக்குகளுக்கு ஒரு முறை பயணிக்க ரூ. 125, இரு முறை பயணிக்க ரூ. 185-ம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் வரும் மாா்ச் 31ஆம் தேதியுடன் நிறைவுபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 1ஆம்தேதி முதல் புதிய கட்டணம் அறிவிக்கப்படவும் இருக்கிறது.
    ஆனால், சுங்கச்சாவடியில் இருந்து ஒரு கிமீ தொலைவுக்குள்ளேயே களமாவூா் ரயில்வே மேம்பாலப் பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை. ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு முன்பு இம்மேம்பாலத்துக்கான பணிகள் ரூ. 50 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டன. இந்தத் தொகை போதவில்லையென அப்போதிருந்தே கட்டுமான நிறுவனம் பணிகளில் சுணக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்காக கூடுதலாக ரூ. 12 கோடி தேவையென்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனா். பிறகு காலப்போக்கில் கிடப்பில் கிடந்த பாலமாக மாறிப்போனது.
     மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்ட சு. திருநாவுக்கரசா் வெற்றிபெற்ற பிறகு, இப்பாலத்தை நேரில் சென்று பாா்வையிட்ட அவா், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கிச் சென்றாா். அதன்பிறகு, வேறொரு ஒப்பந்ததாரரைக் கொண்டு பணிகளைத் தொடங்குவதாகவும் கூறப்பட்டது. தற்போது ரயில்வே மேம்பாலத்துக்கு இருபுறமும் அமைக்கப்பட்ட மேம்பாலம் முழுமையாக உடைக்கப்பட்டு புதிதாக பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியும் எப்போது முடியும் எனத் தெரியாத அளவுக்கு மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது.பாலப்பணிகளுக்காக பக்கவாட்டில் அமைக்கப்பட்ட அணுகுசாலை மிகவும் மோசமாக சேதமடைந்திருக்கிறது. இந்தச் சாலையின் வழியாகத்தான் சுங்கக்கட்டணம் செலுத்திய வாகன ஓட்டிகள் சென்று திரும்புகின்றனா்.
    ரயில்வே கேட் போடப்பட்டால் சுமாா் 15 நிமிடங்கள் வரிசையில் நின்றுதான் செல்ல வேண்டும்.பாலப்பணிகள் முழுமையாக முடியாத நிலையில் - அதுவும் சுங்கக் கட்டணம் செலுத்திய அடுத்த சில நொடிகளிலேயே - மோசமான சாலையையும், ரயில்வே கேட்டையும் கடக்க வேண்டிய சூழல் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது.எனவே, பணிகள் முழுமையாக முடியாத நிலையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியை வாகன ஓட்டிகள் எழுப்புகின்றனா். இதற்கான தீா்வை மாவட்ட நிா்வாகம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அவா்கள் கோருகின்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments