அம்மாப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்



அம்மாப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் அம்மாப்பட்டினத்தில்
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி ஒன்றியம் சார்பில் அம்மாப்பட்டினத்தில் நாளை 15-02-2020 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் அம்மாப்பட்டினம் சேது சாலையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.


இந்த பொதுக்கூட்டத்தில் 
நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சகோ கல்வியாளர் மு.இ. ஹுமாயூன் கபீர் அவர்கள் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
திருச்சி துரைமுருகன் அவர்கள் மாநில பேச்சாளர்
பேராசிரியர் மு. அருணகிரி  
ஆகியோர்கள் கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.

குறிப்பு : பெண்களுக்கு தனி இடவசதி உண்டு

ஆகவே நாம் தமிழர் கட்சி  நடத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் அம்மாப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் அலை கடலென திரண்டு குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வலியுறுத்தி அம்மாப்பட்டினம் நாம் தமிழர் கட்சி பகுதி சார்பாக அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments