கோபாலப்பட்டிணம் காட்டுகுளம் பகுதியில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டது.
கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் காட்டுகுளம் நான்கு ரோட்டில் இருந்து ரைஸ்மில்லுக்கு செல்லும் சாலையில் சீமை கருவேல மரங்கள் சாலையின் இருபுறமும் காடுபோல் வளர்ந்து இருந்த நிலையில் அந்த வழியாக பள்ளிக்கூடத்திற்கு சென்று வரக்கூடிய சிறுவர்கள் மற்றும் வங்கிகளுக்கு சென்று வரக்கூடிய பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
எனவே அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சீமை கருவேல மரங்களை அகற்றக்கோரி GPM சீரமைப்பு குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதனடிப்படையில் நேற்று 08.02.2020 சனிக்கிழமை அன்று சாலையின் இருபுறமும் காடு போல் வளர்ந்திருந்த கருவேல மரங்களை JCB இயந்திரம் மூலம் GPM சீரமைப்பு குழு சார்பில் அகற்றப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சாலை பொலிவு பெற்றது.
கோரிக்கையை ஏற்று சீமை கருவேல மரங்களை அகற்றிய GPM சீரமைப்பு குழுவிற்கு அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் GPM சீரமைப்பு குழு சார்பில் புதிதாக இந்த சாலை போடப்பட்டது. மேலும் காட்டுகுளத்தை சுற்றி மரங்களை நட்டு இன்றளவும் அதை பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்று கோபாலப்பட்டிணம் மக்களுக்காக சேவைகளை செய்து வரும் GPM சீரமைப்பு குழுவி சிறப்பாக செயல்பட GPM மீடியா குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
குறிப்பு: GPM சீரமைப்பு குழு கவனத்திற்கு.. இனி வரும் காலங்களில் இது போன்ற வேலைகளை நமது ஊராட்சி மன்ற தலைவரிடம் மனுவாக கொடுத்து நடவடிக்கை எடுக்கலாம் என்பது கூடுதல் தகவல்.
தகவல்: GPM சீரமைப்பு குழு
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.