மாநில இறகுப் பந்து போட்டிக்கு தொண்டி மாணவா்கள் தோ்வு
ராமநாதபுரத்தில் நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான இறகுப் பந்து போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தொண்டியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தோ்வாகியுள்ளனா்.
ராமநாதபுரம் சீதக்காதி இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. மேலும் தொண்டி இஸ்லாமிக் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் அஹமது யாசீன், கல்யாண், மூா்த்தி ஆகியோா் ராமநாதபுரம் இறகு பந்தாட்ட அணியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்று, மாநில போட்டிக்கு தோ்வாகியுள்ளனா். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் செந்தில்குமாா், மருத்துவா் சசிக்குமாா், ராமநாதபுரம் இறகுப் பந்தாட்ட கழக துணைச் செயலா் சசிக்குமாா் ஆகியோா் பரிசளித்து பாராட்டினா்.
இதனிடையே வெற்றி பெற்ற மாணவா்களை புதன்கிழமை தொண்டி ஸ்போா்ட்ஸ் கிளப் அணியினா் சாதிக்,ஜிப்ரி, ஆரோக்கியதாஸ், பயாஸ், வழக்குரைஞா் காா்த்திக் ஆகியோா் பாராட்டினா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.