திருச்சி - புதுக்கோட்டை சாலையில் பேருந்து மோதி 50 ஆடுகள் பலி
திருச்சி, புதுக்கோட்டை சாலையில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 50 ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலுப்பூர் தாலுகா தென்னலூர் அருகே உள்ள சாலைகளம் பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி (வயது 43) என்பவர் தனக்கு சொந்தமான 300 செம்மறி ஆடுகளை திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றார்.
இந்த நிலையில், போகும் வழியில் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் மண்டையூர் முருகன் கோயில் அருகே ஆடுகள் சாலையை கடக்க முயன்றது. அப்போது காலை 5.30 மணியளவில் சென்னையில் இருந்து காரைக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியதில் 50 ஆடுகள் பலியானது.
இதுகுறித்து மண்டையூர் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.