சவூதி அரேபியாவில் பணி புரிந்து வந்த மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதரர் அருள் குமார் சில நாட்களுக்கு முன்பு சவூதியில் மரணமடைந்ததார்கள், சகோதரரின் உடலை தாயகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து அதற்க்கான பணிகளை சட்ட ரீதியில் ஃபைசல்யா கிளையை சார்ந்த TNTJ சகோதரர்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு.
வெள்ளிக்கிழமை (31-01-2020) காலை சென்னை விமான நிலையத்திற்கு அன்னாரின் உடல் கொண்டு வரப்பட்டு அன்னாரின் சொந்த ஊரான வாணகிரி (பூம்புகார்) வரை பிரேதத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என மேலும் கோரிக்கை வைக்கப்பட்டதின் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகத்தின் ஆலோசனை மற்றும் ரியாத் மண்டலத்தின் கோரிக்கையின் பெயரில்.
மாநிலத் தலைமையின் ஆம்புலன்ஸ் மூலமாக, சென்னை விமான நிலையத்தில் அனைத்து சட்ட மற்றும் சுங்க வழி முறைகளும் முடிக்கப்பட்ட பின்னர் சகோதரரின் உடல் வாணகிரிக்கு கொண்டு சேர்க்க அனைத்து வித முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு.
மாநிலத் தலைமை, ரியாத் மண்டலம் மற்றும் நாகை (வடக்கு) மாவட்ட நிர்வாகிகள் உதவியுடன் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனது திருப்தியை மட்டுமே நாடி பணிகள் மேற்க் கொள்ளப்பட்டு சகோதரின் ஜனாஷா அவரது குடும்பத்தாரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
மேலும் அச்சகோதரரின் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் நேரில் சென்ற கொள்கை சகோதரர்கள் மூலம் ஆறுதலும் கூறப்பட்டது.
உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் இந்த தன்னலம் பாராத மனித நேயப் பணியைப் பாராட்டி நன்றியை தெரிவித்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
அவரது குடும்பத்தாருக்கு இறைவன் நிம்மதியை தருவானாக! மேலும் இதற்காக உழைப்பு செய்த அனைத்து சகோதரர்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக!
என்றும் சமுதாயப் பணியில்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ரியாத் மண்டலம்
01.02.2020
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.