கோபாலப்பட்டிணத்தில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு ஷாகின் பாக் தொடர் போராட்ட களத்தில் இன்றைய (04-03-2020) பேச்சாளர்கள் விபரம் !!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் VIP நகர் கிழக்கு கடற்கரை சாலையில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஷாகின் பாக் தொடர் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.


போராட்ட நாள்: 4-வது நாள் 

அந்த வகையில் இன்றைய 04.03.2020 (புதன்கிழமை) அரங்கில் பேச்சாளர்கள் விவரம் :

கவிவர்மன் அவர்கள், மாவட்டச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

பேசும் நேரம்: 5.30 மணி முதல் 6.30 மணி வரை 

ஹுமாயூன் கபீர் அவர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.

பேசும் நேரம்: 6.45 மணி முதல் 7.45 மணி வரை

சித்திக் அவர்கள், மாநில செயலாளர், SDPI

பேசும் நேரம்: 7.45 மணி முதல் 8.45 மணி வரை


கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், இந்தச்  சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

ஆகவே கோபாலபட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கக்கூடிய அனைத்து மக்களும் போராட்டக்களத்திற்கு  சென்று தவறாது கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்யுமாறு போராட்ட குழு & கோபாலப்பட்டிணம் மீடியா சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: கோபாலப்பட்டிணம் ஷாகின் பாக் போராட்ட ஒருங்கிணைப்பு குழு,

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments