ஆதார் கார்டு எண்ணை பான்கார்டுடன் குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றுஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கால அவகாசமும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இறுதி வாய்ப்பாக இந்த மாதம் 31-ந்தேதிக்குள் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து வருமானவரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பான்கார்டு வைத்து இருப்பவர்கள் அனைவரும் இந்த மாதம் (மார்ச்) 31-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை அதில் இணைக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய பான்கார்டு செயல்படாமல் முடங்கி விடும்.
ஆதார் கார்டு எண்ணை பான்கார்டுடன் குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும்.
ஏப்ரல் 1-ந்தேதி முதல் வேறு பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். பான்கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்.
ஆனால், 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பணபரிமாற்றத்துக்கு பான்கார்டை பயன்படுத்தும் போது அதற்கு அபராதம் செலுத்த வேண்டும்.
இந்த மாதம் 31-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காத பான்கார்டு முடக்கப்படும். என்றாலும் ஆதார் எண்ணை இணைத்தால் மீண்டும் செயல்பட தொடங்கி விடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.