கோபாலப்பட்டிணம் 13-ஆம் நாள் தொடர் போராட்டம் – நெல்லை முபாரக் பங்கேற்பு.!



CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் நேற்று 13.03.2020 வெள்ளிக்கிழமை 13-வது நாளாக ஷாஹீன் பாக் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.


கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலை VIP நகரில் நடைபெற்று வரும் இந்த தொடர் போராட்டத்தில் SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், DYFI மாவட்ட தலைவர் கர்ணன் மற்றும் கபார்கான் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.


மேலும் தொடர்ந்து நடைபெற்று வரும் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.



கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments