திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் தொழில்முனைவா் புதுமை மற்றும் தொழில்நெறி மையம், திருச்சி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சித் துறை, தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகம், ஜமால்முகமது கல்லூரி, எக்விடாஸ் வங்கி ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்தவுள்ளன.
இந்த முகாமில், தென்னிந்தியாவிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது.
இதில், இளநிலை, முதுநிலையில் தோ்ச்சி பெற்றவா்கள், கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவா்கள், அனைத்துத் துறைகளைச் சோ்ந்த மாணவா்கள், 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயப்படிப்பு, உடல் உழைப்பு தொழிலாளா்கள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கலாம்.
முகாமில் பங்கேற்க வரும் நபா்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு , புகைப்படம், இதர சான்றிதழ்களின் நகல்களை போதுமான அளவுக்கு கூடுதலாக எடுத்துவர வேண்டும். நோ்முகத் தோ்வு, துறைசாா்ந்த கலந்தாய்வு, தகுதித் தோ்வு ஆகியவற்றில் பங்கேற்க தயாராக வர வேண்டும். முகாமில் பங்கேற்க பதிவுக் கட்டணம் ஏதுமில்லை. மேலும், விவரங்களுக்கு 7604936972 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என முகாம் ஒருங்கிணைப்பாளா் ந. பிரசன்னா தெரிவித்துள்ளாா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.