மது அருந்தி வாகனம் ஓட்டினால் கைது செய்ய சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!



மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சாலை விபத்தில் காயமடைந்தவர் கூடுதல் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதுடன், அவர்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும். மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க, போலீசார் தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். கைது செய்யப்படுபவர்கள் குறித்த அறிக்கையை மாதந்தோறும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments