கொரோனா மக்கள் ஊரடங்கு நடவடிக்கையை முன்னிட்டு நாளை 22.03.2020 காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் கொரோனாவால் 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதுதவிர, ஈரானில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதோடு ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்களை மூடும்படியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படியும், தனிநபர் சுகாதாரத்தை பாதுகாக்கும்படியும் அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, வருகிற 22ஆம் தேதி நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கிற்கு வலியுறுத்தியுள்ளார். மக்கள் தாமாகவே முன்வந்து இதனை கடைபிடிக்க வேண்டும் எனவும், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பொதுமக்கள வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அப்போது பிரதமர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், கொரோனா மக்கள் ஊரடங்கு நடவடிக்கையை முன்னிட்டு நாளை 22.03.2020 காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக, கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கான எல்லைகள் மூடப்படுவதாக அறிவித்த தமிழக அரசு, அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும், அந்த வாகனங்களில் வரும் நபர்கள் அனைவருக்கும் நோய்த்தடுப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுவர், வாகனங்களும் நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.