திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை அருகே தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்கள் காரில் சுற்றுலா சென்றபோது லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 7 பேர் ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்றுகொண்டிருந்தனர். அவிநாசி பழங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று (மார்ச் 19) காலை அவர்கள் காரில் சென்று கொண்டிருந்த போது, முன்னே சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் வந்த 5 மாணவர்களும், கார் ஓட்டுநரும் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ் (21), சூர்யா (21), வெங்கட் (21), சின்னசேலத்தைச் சேர்நத இளவரசன் (21), வசந்த் (21) ஆகிய 5 மாணவர்கள் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், தருமபுரியை சேர்ந்த சந்தோஷ் (22), சேலத்தைச் சேர்ந்த கார்த்தி (21) ஆகிய இரு மாணவர்கள் காயமடைந்தனர். இவர்கள் முறையே அவிநாசி அரசு மருத்துவமனையிலும், கோவை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.