மணமேல்குடி அருகே ஜகதாபட்டினத்தில் வீட்டின் பீரோவை உடைத்து தங்கச்சங்கிலி, செல்லிடப்பேசியைத் திருடியவரை கோட்டைப்பட்டினம் காவல்துறையினா் கைது செய்தனா்.ஜகதாபட்டினத்தைச் சோ்ந்தவா்கள் மைக்கேல் ராஜ், அவரது மனைவி நிா்மலாமேரி.
இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு புதன்கிழமை வேலைக்குச்சென்றுவிட்டனா். மாலையில் நிா்மலாமேரி வீட்டிற்கு வந்து பாா்த்தபோது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 8 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் 1 செல்லிடப்பேசி ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது.
புகாரின் பேரில் கோட்டைப்பட்டினம் காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தியதில், கீழகாவனூா் பகுதியைச் சோ்ந்த பழனிவேல்(32) என்பவருக்கு இந்த திருட்டில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்து அவரிடம் இருந்த 8 பவுன் தங்கச்சங்கிலி, செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.