சீனாவில் கொரோனா பாதித்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஏ பிரிவு ரத்தவகை கொண்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
சீனாவின் ஊஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்திவருகிறது. இதுவரையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000-த்தைத் தாண்டியுள்ளது. இந்தநிலையில், ஊஹான் மற்றும் ஷென்ஷென் பகுதியில் கொரோனாவால் பாதித்த 2,000 பேரின் ரத்த மாதிரிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், ஏ ரத்த வகை கொண்டவர்கள்தான் அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏ ரத்த வகை கொண்டவர்களுக்குதான் பாதிப்பும் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த ஆய்வாளர்கள், ‘இது தொடக்க நிலை ஆய்வுதான். இன்னும் தீவிரமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அரசு மற்றும் மருத்துவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களைக் கையாளும்போது ரத்த மாதிரி வகைகளைக் கருத்திக் கொள்ள வேண்டும். ஏ ரத்த மாதிரிகள் கொண்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு அதிகம் தேவை, அதேபோல, ஓ ரத்த வகை கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவாக உள்ளது. இதற்கு முன்னர் வந்த சார்ஸ் வைரஸூம் ஏ ரத்த வகை கொண்டவர்களையே அதிகம் தாக்கியது. கொரோனாவும் சார்ஸ் குடும்பத்தைச் சார்ந்ததுதான்’ என்று வலியுறுத்தியுள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.