இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு திருத்துறைப்பூண்டி வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் அருட்செல்வன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் துளசிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.