கொரோனா எதிரொலி: கோபாலப்பட்டிணம் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை



கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை செயல்படுத்தும் விதமாக காவல்துறையும் சுகாதாரத் துறையும் தன்னார்வலர்களின் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். 

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில் பல மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். 

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன் வளத்துறை &  மீனவர் சங்க தலைவர் அறிவுறுத்தலின் படி, மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

இன்று 28.03.2020 சனிக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீறி சென்றால் கடலோர காவல்படையின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு : கோபாலப்பட்டிணத்தில் இந்த நடைமுறை இன்று 28.03.2020 சனிக்கிழமை  முதல் அமலுக்கு வருகிறது.

அறிவிப்பு:மீன் வளத்துறை

தகவல்: பஷீர் முகமது 
கோபாலப்பட்டிணம் 
மீனவர் சங்க தலைவர்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments