இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து நேற்று 18-வது நாளாக தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அடுத்த கட்ட போராட்டமாக போராட்டகாரர்கள் வங்கியில் பணம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமையே கேள்விக்குறி ஆக்கப்பட்ட நிலையில் இருப்பதால், வங்கிகளும் திவால் ஆகி கொண்டிருப்பதால் மக்களின் பணத்திற்கு நிச்சயம் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்தும், தங்கள் பணத்தை வைத்துதான் வங்கிகள் இயங்குகிறது, அந்த பணத்தை வங்கியில் இருப்பு வைக்காமல் தவிர்த்துவிட்டால் அரசாங்கத்திற்கு பொருளாதார ரீதியான நெருக்கடியை ஏற்படுத்துவதன் மூலம் இந்த சட்டத்தை திரும்பப்பெற வைக்க முடியும் என்பதை உணர்ந்தும் நேற்று 13.03.2020 தொண்டி மக்கள் வங்கிகளில் இருப்பு வைத்திருந்த பணத்தை முற்றிலுமாக எடுத்து அதன் மூலம் அரசாங்கத்திற்கு அவர்களின் எதிரப்பை பதிவு செய்தார்கள்.
இதே போன்று அனைத்து ஊர்களிலும் செய்ய வேண்டும் என்று தொண்டி மக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
நேற்றைய தினம் 13.03.2020 கோபாலப்பட்டிணம் ஷாஹின் பாக் தொடர் இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் மீமிசல் SBI வங்கியில் தங்கள் இருப்பு தொகையை எடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.