மீமிசல் அருகே பெண்ணை தாக்கி நகை பறிக்க முயன்ற போது அவரது மண்டை உடைந்தது.
மீமிசல் அருகே நாட்டாணிபுரசக்குடி கிராமத்தின் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தாக்கி நகை பறிக்க மேற்கொண்ட முயற்சியில் பெண் படுகாயம் அடைந்தார்.
தளவரை கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி கவிதா(35) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் மீமிசலில் வீட்டிற்க்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு திரும்புகையில் அதன் வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் கம்பியால் தாக்கி கவிதா கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார். அப்பொழுது கவிதா கூச்சலிடவே அரு கில் இருந்தவர்கள் அவரை மீட்டு மீமிசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து மீமிசல் காவல் நிலையத்தில் புகார் அளித் துள்ளனர் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.