கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை செயல்படுத்தும் விதமாக காவல்துறையும் சுகாதாரத் துறையும் தன்னார்வலர்களின் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) இருந்து கோபாலப்பட்டிணம் செல்லும் அனைத்து நுழைவு வாயில்களும் இன்று 27.03.2020 வெள்ளிக்கிழமை இரவு முதல் மூடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 6 நுழைவு வாயில்களில் காவல் நிலையம் எதிரே உள்ள நுழைவாயில் மற்றும் விஐபி நகரின் மூன்று நுழைவு வாயில்களிலும் முழுமையாக மூடப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி (SBI) வழியாக செல்லும் நுழைவாயிலில் இருசக்கர வாகனம் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.மற்றொரு நுழைவாயிலான அவுலியா நகர் நுழைவு வாயிலில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லும் விதமாக தடுப்பு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே கார் மற்றும் ஆட்டோவில் கோபாலப்பட்டிணத்தில் இருந்து மீமிசலில் செல்லக்கூடியவர்கள் அவுலியா நகர் நுழைவு வாயிலை பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பு: கோபாலப்பட்டிணத்தில் இருந்து கார் மற்றும் ஆட்டோவில் மீமிசல் செல்லக்கூடியவர்கள் அவுலியா நகர் வழியாக மட்டுமே செல்ல முடியும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.