கொரோனா எதிரொலி: கோபாலப்பட்டிணம் நுழைவாயில்கள் மூடல்.!



கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை செயல்படுத்தும் விதமாக காவல்துறையும் சுகாதாரத் துறையும் தன்னார்வலர்களின் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) இருந்து கோபாலப்பட்டிணம் செல்லும் அனைத்து நுழைவு வாயில்களும் இன்று 27.03.2020 வெள்ளிக்கிழமை இரவு முதல் மூடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 6 நுழைவு வாயில்களில் காவல் நிலையம் எதிரே உள்ள நுழைவாயில் மற்றும் விஐபி நகரின் மூன்று நுழைவு வாயில்களிலும் முழுமையாக மூடப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி (SBI) வழியாக செல்லும் நுழைவாயிலில் இருசக்கர வாகனம் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.மற்றொரு நுழைவாயிலான அவுலியா நகர் நுழைவு வாயிலில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லும் விதமாக தடுப்பு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

ஆகவே கார் மற்றும் ஆட்டோவில் கோபாலப்பட்டிணத்தில் இருந்து மீமிசலில் செல்லக்கூடியவர்கள் அவுலியா நகர் நுழைவு வாயிலை பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பு: கோபாலப்பட்டிணத்தில் இருந்து கார் மற்றும் ஆட்டோவில் மீமிசல் செல்லக்கூடியவர்கள் அவுலியா நகர் வழியாக மட்டுமே செல்ல முடியும்.





கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments