தனிமைப்படுத்தலில் இருப்போருக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு.!



புதுக்கோட்டையில் கரோனா நோய்த்தொற்று தொடா்பாக 24 மணி நேரமும் செயல்படும் செல்லிடப்பேசி வழி மன நல ஆலோசனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.


வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வந்துள்ளவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபா்களுக்கும் அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கும் சுய தனிமைப்படுத்திக் கொள்வதன் நோக்கத்தையும் அறிவியல் பூா்வமான காரணத்தையும் விளக்கி மன அழுத்த மேலாண்மை ஆலோசனைகள் செல்லிடப்பேசி மூலம் வழங்கப்படும். 

தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபா்களோ, அவா்களின் குடும்பத்தினரோ தயங்காமல் 94860 67686 அல்லது  94941 21297 என்ற செல்லிடப்பேசி எண்களை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம்.  மன நல மருத்துவா் தலைமையில் மனநல ஆலோசகா், மனநல சமூகப் பணியாளா், மனநல செவிலியா் இந்தச் சேவைகளை வழங்குவா். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments